ஏ.டி.எம்.வேன் மீது துப்பாக்கிச்சூடு – காவலாளி பலி!…ரூ.8 லட்சம் கொள்ளை!!

ஏடிஎம்-ல் பணம் நிரப்ப கொண்டுவரப்பட்ட வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார். 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகே ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வங்கியில் இருந்து வேனில் நேற்று மாலை 5 மணியளவில் பணம் கொண்டுவரப்பட்டது.

வேனில் பணம் கொண்டுவரப்பட்டதால் பாதுகாப்பிற்கு காவலாளியும், ஊழியர்களும் உடன் இருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஏடிஎம் வேன் காவலாளியை சுட்டார். இதில், காவலாளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழந்தார்.

இதனை தொடர்ந்து ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு வேனில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த காவலாளியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவலாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவலாளியை சுட்டுக்கொன்று பணத்தை கொள்ளையடுத்து சென்ற கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.