திருவிழாக்களில் ‘குறவன் – குறத்தி’ ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

திருவிழாக்களில், குறவன் – குறத்தி என்ற பெயரில் அரங்கேற்றப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

குறவன் – குறத்தி என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில், குறவர் சமூக மக்கள் 20 லட்சம் பேர் வசித்துவரும் நிலையில், அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இணையத்தில் குறவன் – குறத்தி என தேடினால் ஆபாச நடனங்கள் வருவதால் அவற்றை நீக்கவும், பதிவேற்றுவோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.