சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியது. வடகிழக்கு பருவமழை விலகியதால் குளிர் அதிகரிக்கும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவும். உள்மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்றும் கூறியுள்ளது.
