சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்….

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி, பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்ப சுவாமியை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு பூஜையைஒட்டி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து ஊர்வலமாக, சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு, ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதியாக ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விண்ணதிர சரண கோஷங்களுடன் மகர ஜோதியை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.