பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை..!!

நெல்லை மாவட்டத்தை அடுத்த பாளையங்கோட்டை அருகே கனரா பேங்க் காலனியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி தேவி தஞ்சாவூரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதனால் பன்னீர்செல்வம் தனது மனைவி உடன் தஞ்சாவூரில் தங்கியுள்ளார். இருந்தபோதிலும் அடிக்கடி சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்து சென்றுள்ளனர். 

இதனிடையே பொங்கல் விடுமுறை என்பதால் இருவரும் இன்று சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் வசித்து வந்த வீட்டில் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை போனதை அடுத்து பன்னீர் செல்வமும் அவரது மனைவி தேவியும் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். பீரோ உடைக்கப்பட்ட பகுதியில் இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரியின் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.