கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதிக்கு விரைவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்னும் சற்று நேரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.