கலப்பட பால் விற்ற வழக்கில் 32 ஆண்டுக்கு பின் 6 மாத தண்டனை

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் கபீர் சிங் என்பவர் கலப்பட பால் விற்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பால் ஆய்வக சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அவர் கலப்பட பால் விற்றது உறுதியானது. இது தொடர்பாக உணவுப்பொருள் ஆய்வாளர் சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கபீர் மீது 1990ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வழக்கு பதியப்பட்டது.

இதனை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரசாந்த் குமார் கபீருக்கு 6 மாத சிறைத் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், 32 ஆண்டுகளுக்கு பின் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.