எச்.ராஜா. அநாகரீகத்தின் அடையாளம்: திருமாவளவன் காட்டம்!

எச்.ராஜா. அநாகரீகத்தின் அடையாளமாக திகழ்கிறார் என்று நாங்குநேரியில்
திருமாவளவன்
கடுமையாக சாடினார்.

தலித் மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் இருந்து காரில் சாமி தோப்பிற்கு சென்றார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச் சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது களக்காடு அருகே வேதநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த தலித் பொதுமக்கள் இடுகாட்டு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும் திருமாவளவனிடம் மனு அளித்தனர்.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்கள் குறித்து அவ்வவ்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு முறைகளை ஒழிக்க வேண்டும் என்றும் முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

எச்.ராஜா திருமாவளவனின் நாக்கை துண்டிப்போம் என்று பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் அவர் அநாகரீகத்தின் அடையாளமாக திகழ்கிறார் என்று கடுமையாக சாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.