கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்த புள்ளிமான் மீட்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி கொடிக்கால்வெளி கிராமத்துக்குள் தண்ணீர் தேடி இன்று காலை 8.30 மணியளவில் புள்ளிமான் ஒன்று வந்தது.மானை பார்த்ததும்  நாய்கள் விரட்டி சென்று கடித்தது.
இதனால் நாய் களிடமிருந்து தப்பி ஓடிய மான் அங்கிருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.

இதையடுத்து நாய்களிடமிருந்து புள்ளிமானை காப்பாற்றிய மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் 4 பணியாளர்கள் வந்து 3 வயதான 3 அடி உயரமுள்ள புள்ளிமானை மீட்டு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கோடியக்கரை சரணாலயத்தில் புள்ளிமானை பாதுகாப்பாக வனத்துறையினர் விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.