விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே சாலைகளின் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து வந்த புகாரை அடுத்து உணவகத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் சோதனை நடத்தினர். தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
