
உலகம் முழுவதும் மனிதர்கள் பார்க்க ஒன்றுபோல இருந்தாலும் பலர் பல விதங்களில் மாறுபட்டவர்களாகவே இருக்கின்றனர். பலருக்கு பல உணவுகள் அலர்ஜியாக இருப்பதால் வாழ்நாள் முழுக்கவே அப்படியான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு மூதாட்டி அலர்ஜியால் அல்ல தன் வைராக்கியத்தால் உணவே சாப்பிடாமல் வாழ்ந்து வருகிறார்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹூக்ளி பகுதியை சேர்ந்தவர் 76 வயதான அனிமா சக்ரபூர்த்தி என்ற மூதாட்டி . அவர் இதுவரை சாதம், சப்பாத்தி, டிபன் ஐட்டங்கள் போன்ற திட உணவுகளையே எடுத்துக் கொண்டதில்லையாம். காலை ஒரு டீ, மதியம் ஒரு ஹார்லிக்ஸ், மாலை ஒரு ஜூஸ் என ஒன்லி திரவங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.