ரோஜ்கர் மேளா திட்டத்தில் அரசுத்துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  பல்வேறு அரசுத்துறைகளில்  71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று வழங்கினார்.

ரோஜ்கார் மேளா திட்டத்தில் கடந்த அக்டோபர் மாதல் முதற்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கப்பட்டநிலையில், இன்று இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் இருந்து ஜூனியர் பொறியாளர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை பிரதமர் வழங்கினார். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களை பிரதமர் கேட்டறிந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.