#BREAKING :: காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (ஜன.21) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கடந்த வடகிழக்கு பருவ மழையின் பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முழு பணி நாளை (ஜன.21) செயல்படும்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.