ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய நடிகை நித்யா மேனன்: மாணவர்கள் குஷி..!!

ஆந்திரா: ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடிகை நித்யா மேனன் பாடம் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. திரைப்பட நடிகை நித்யா மேனன் திருப்பதி வரதய பாளையத்தில் கல்கி ஆசிரமத்திற்கு சென்றார். அப்போது அருகில் உள்ள கிருஷ்ணா புரத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்ற அவர் அரசு பள்ளியை பார்வையிட்டார். பள்ளி மாணவர்களுடன் உரையாடிய நித்யா மேனன் ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. பிரபல நடிகை ஒருவர் நேரில் வந்து உரையாடி பாடம் சொல்லிக்கொடுத்தது மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.