17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை.! தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பவனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை தொழிலாளி கவுதமன் (44). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமானதால், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கவுதமன் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை என்றும், சிறுமியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கவுதமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கௌதமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.