பானிபட்: அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் சதர் பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே ரசாயன லோடு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிக்கு சர்வீஸ் நடந்து கொண்டிருந்தது. பழுதான பகுதிகளுக்கு தொழிலாளர்கள் வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக வெல்டிங் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தீப் பொறியில், டேங்கர் லாரி திடீரென பற்றியது. அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன் ேடங்கர் வெடித்தது. இந்த சம்பவத்தின் வெல்டிங் கடையில் மேற்கூரை சிதறியது.
இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலம் கடம்பூரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஜுனைத், பானிபட்டைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இதற்கிடையில் சம்பவ இடத்தில் நின்றிருந்த கத்மல்பூரைச் சேர்ந்த முகமது உசேன், வெல்டர் சோம்நாத் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் அருகிலுள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.