பிபிசி தொடர் நீக்கம்; பிரதமர் பயப்படுவது தெரிகிறது..காங்கிரஸ் சுளீர்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது.

ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல” என விமர்சித்துள்ளார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், லிங்க்குகளை ஒன்றிய அரசு முடக்கியது. இந்தநிலையில் ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியின் டிவிட்டர் பதிவும் நீக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறுபான்மையின மக்களைப் பற்றிய மோடியின் எண்ணம் இந்த ஆவணப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஒ ப்ரைன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆவணப்படத்தை இந்திய அரசு நீக்குவது குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறும்போது, ‘‘இந்திய அரசிடம் ‘பிளாக் இன் இந்தியா’ என்ற திட்டம் உள்ளது. பிபிசியின் தலைமையகம் இந்தியாவில் எங்காவது இருந்திருந்தால், மோடி அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும்.

இந்தியாவின் பிரதமராகும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது; சஞ்சய் ராவத் கணிப்பு.!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மோடி ஜியிடம் ‘ராஜ் தர்மத்தை’ பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பிபிசி தொடர் தடுப்பதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. இது போன்ற செயல்கள் ஆவணப்படத்தில் உள்ள உள்ளடக்கம் உண்மை என்று பொதுமக்களை நம்ப வைக்கிறது. நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதை உங்கள் செயல்கள் எங்களிடம் கூறுகின்றன’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.