அதிமுக செய்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல… திருமா எச்சரிக்கை!

சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு.?

ஆளுநர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும்., வேறு பொறுப்பு ஆளுநர் நியமிக்க இருப்பதாக தகவல் வருகின்றது.

பாஜக ஆதரவு நிலைப்பாடு என்ற ops முடிவு குறித்த கேள்விக்கு.?

அதிமுகவில் உட்கட்சி பூசல் பாஜகவிற்கு சாதகமாக அமையும். போட்டிபோட்டு கொண்டு பாஜகவிற்கு காவடி தூக்குகிறார்கள். உட்கட்சி பூசலால் பாஜகவை அதிமுக தூக்கிப்பிடிப்பது அதிமுகவிற்கும்., தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல.

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றிக்கு பாடுபடும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றசாட்டு குறித்த கேள்விக்கு.?

திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்றிகொண்டிருக்கிறது. நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது., நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்

சாதிவாரி கணக்கெடுப்பு குளித்த கேள்விக்கு.?

வட மாநிலங்களில் கூட இந்த குரல் வலுவாக உள்ளது. பீகாரில் இது குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன் என்ரு திருமாவளவன் பதிலளித்தார்.

முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர்.

பின்னர் பேசிய ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களின் நிலைப்பாடு குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

ஆனால் பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்பவில்லை.ஏற்கெனவே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம், எம்.எல்.ஏ சி.சரஸ்வதி, என்.பி.பழனிசாமி, எஸ்.ஏ.சிவசுப்ரமணியம், எஸ்.எம்.செந்தில், சிவகாமி மகேஸ்வரன், பொன்.ராஜேஷ் குமார், ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, என்.விநாயகமூர்த்தி, டி.தங்கராஜ், ஆற்றல் அசோக் குமார், புனிதம் ஐயப்பன், டி.ரஞ்சித் ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் பாஜக மற்றொரு விஷயத்தை மேற்கொண்டதாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 15 பேர் கொண்ட சீக்ரெட் குழுவை களமிறக்கி ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களின் பல்ஸ் என்னவென்று கண்டறிய சர்வே ஒன்றை நடத்தியுள்ளதாம். இவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.