புதுடெல்லி: நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் தடங்கள் ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது என்று தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சனிக்கிழமை நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "நமது அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்பது துருவநட்சத்திரம் போன்றது. அது, சட்டத்திற்கு விளக்கம் அளிப்பவர்களுக்கும் (interpreters) அதனை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் பாதையில் இடையூறு ஏற்படும்போது வழிகாட்டி, சரியான திசைகளைக் காட்டுகிறது.