உறவினர் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்த இலங்கை தமிழர் உயிரிழப்பு! நடந்தது என்ன?


தமிழகத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார்.

உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கை தமிழர்

இலங்கையை சேர்ந்தவர் வேல்வரதன் (45). இவர் சுற்றுலா விசாவில் திருச்சி விமானநிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வாகீஸ்வரன் (58) என்பவர் வீட்டுக்கு கடந்த 19ம் திகதி வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வேல்வரதன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகீஸ்வரன் அவரை சிகிச்சைக்காக பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

உறவினர் வீட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்த இலங்கை தமிழர் உயிரிழப்பு! நடந்தது என்ன? | Srilankan Tamil Died Tamilnadu Visit Relative

Representational/indianexpress

உயிரிழப்பு

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேல்வரதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விமானநிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.