'எனக்கும் அண்ணாமலைக்கும்'… உடைத்து பேசும் காயத்ரி ரகுராம்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர் கோடி தூக்கி கட்சியை விட்டு வெளியே வந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை போட்டு தாக்கி பேசி வருகிறார். தொடக்கத்தில் அண்ணாமலை மீது மட்டுமே அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த காயத்ரி தற்போது பாஜக கட்சிக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், காயத்ரி ரகுராமுக்கு திமுகதான் கொம்பு சீவி வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், துபாய்க்கு சென்ற காயத்தி ரகுராம் அங்குள்ள ஹோட்டலில் திமுகவைச் சேர்ந்த நபரை சந்தித்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் இன்னும் வெளியிடவில்லை. காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகியதில் இருந்து அவரை குறித்த அண்ணாமலை எந்த விமர்சனத்தையும் எழுப்பவில்லை.

இருப்பினும், காயத்ரி ரகுராம் அண்ணாமலையை அனுதினமும் வம்பிழுத்து வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என்றும் அன்னமைக்கு சவால் விட்டு வருகிறார் காயத்ரி.

இந்த நிலையில் இன்று மீண்டும் அண்ணாமலையை சீண்டி ட்வீட் போட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளராக போட்டியிட்டால் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் உங்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நான் நிற்கத் துணிந்தேன். ஆனால் மிகப் பெரிய கட்சியை வைத்துக்கொண்டு மாஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் போட்டியிடத் தயாராக இல்லை. உண்மை என்னவென்றால், களத்தில் இருவருக்கும் பூத் கமிட்டி அல்லது பூத் முகவர் இல்லை, உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்- நான் சுயேச்சை, நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். ஆனாலும் என்னால் உங்களை வெல்ல முடியும்” என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நீதிக்கு போராடுவதாக சொல்லி ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை செல்வதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அதில் அவர், ஜனவரி 27ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது “சக்தி யாத்திரை” ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.

எனக்கு Z பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும், ஆனாலும் நான் பயப்பட

மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.