மும்பை உள்ளாட்சி தேர்தல்; உத்தவ் தாக்கரேவுடன் இணைந்த அம்பேத்கர் பேரன்.!

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் (VBA) கூட்டணியை இன்று அறிவித்தார். வரவிருக்கும் மும்பை உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு இந்த கூட்டணி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும்.

‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கருடன், இரண்டு மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று ஜனவரி 23, பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பலர் நாங்கள் ஒன்றாக வர வேண்டும் என்று விரும்பியதில் நான் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். பிரகாஷ் அம்பேத்கரும் நானும் கூட்டணி அமைக்க இன்று இங்கு வந்துள்ளோம்” என்று உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனது தாத்தாவும் பிரகாஷ் அம்பேத்கரின் தாத்தாவும் அந்த நேரத்தில் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடியவர்கள். தாக்கரே மற்றும் அம்பேத்கருக்கு ஒரு வரலாறு உண்டு. இப்போது அவர்களின் வருங்கால சந்ததியினர் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளில் போராட இங்கே இருக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தேர்தலில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா மற்றும் பாஜக கூட்டணியை இந்த கூட்டணி எதிர்கொள்ளும். உத்தவ் தாக்கரேவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (என்சிபி) இந்த கூட்டணியில் இடம் பெறாமல் போகலாம். கூட்டணி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சரத் பவார் கூறியுள்ளார்.

‘‘இந்த கூட்டணி நாட்டில் புதிய அரசியலின் தொடக்கத்தை குறிக்கிறது. சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறோம். சமூக பிரச்சனைகளில் வெற்றி பெறுவது வாக்காளர்கள் கையில் தான் உள்ளது, ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு போட்டியிட சீட் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கையில் உள்ளது.

காங்கிரஸ் இன்னும் கூட்டணியை ஏற்கவில்லை. தற்போதைக்கு, நாங்கள் இருவர் மட்டுமே. காங்கிரஸ் இன்னும் கூட்டணியை ஏற்கவில்லை. சரத் பவாரும் கூட்டணியில் சேருவார் என்று நம்புகிறேன். எனக்கு காங்கிரஸில் நம்பிக்கை இல்லை. அவர்கள் 2029 (லோக்சபா) தேர்தலில் கவனம் செலுத்துகிறார்கள். இதற்கு முன்பு, காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் 12 இடங்களை நான் கோரியிருந்தேன், ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.

பிரகாஷ் அம்பேத்கர் கடந்த 2019 தேசியத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணி அமைக்க முயன்றார். ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அவர்களது பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இந்தநிலையில் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரேயுடன், மும்பை உள்ளாட்சி தேர்தலுக்காக பிரகாஷ் அம்பேத்கர் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.