பாகிஸ்தான் இளம் பெண் பெங்களூருவில் கைது| 19-year-old Pakistani girl arrested in Bengaluru

பெங்களூரு: சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 19 வயது பாகிஸ்தான் இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகி்ன்றனர். பெங்களூருவின் ஜூனாசந்த்ரா என்ற பகுதியில் 19 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் கடந்தாண்டு இந்திய -நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியதும், பீஹாரில் வேறு பெயரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.அவரிடமிருந்து போலி ஆதார் அட்டையை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.