Varisu: வாரிசு 11 நாட்களில் ரூ. 250 கோடி வசூல் நண்பா: உருட்டுங்க, உருட்டுங்கனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

வாரிசு படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர்கள் செம குஷியாகிவிட்டார்கள்.

வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய், ரஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடியாக நடித்த வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி ரிலீஸானது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை குறி வைத்து வந்த வாரிசு படத்தை குடும்ப ஆடியன்ஸ் ஏற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் படம் ரிலீஸான ஏழே நாட்களில் உலக அளவில் ரூ. 210 கோடி வசூலித்ததாக அறிவித்தார்கள். தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ரூ. 250 கோடி#MegaBlockbusterVarisu வாரிசு படம் ரிலீஸான 11 நாட்களில் உலக அளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது நண்பா என ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளபதி ஒன் மேன் ஷோ. இதெல்லாம் ஜுஜுபி. இன்னும் பல கோடி வருமானம் வரும் என பெருமையாக தெரிவித்துள்ளனர்.

அறிவிப்பு
உருட்டுதயாரிப்பு நிறுவனத்தின் ட்வீட்டை பார்த்த மற்றவர்கள் கூறியிருப்பதாவது, ரூ. 250 கோடிக்கு ஆதாரம் இருக்கிறதா?. இது உலக மகா உருட்டா இருக்கே. நீங்கள் ஏற்கனவே சொன்ன ரூ. 210 கோடி வசூலே பொய் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துவிட்டார். அதற்கு விளக்கம் கொடுக்காமல் ரூ. 250 கோடினு சொல்லியிருக்கிறீர்களே. பார்த்து, விஜய்ணா வீட்டுக்கு ரெய்டுக்கு போய்விடப் போகிறார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள்.

கிண்டல்வாரிசு படம் தெலுங்கு படத்தை தமிழில் டப் செய்தது போன்று இருக்கிறது என்று சிலரும், டிவி சீரியல் போன்று இருக்கிறது என்று சிலரும் கிண்டல் செய்துள்ளனர். வாரிசு படத்தின் வசூல் உண்மை என்றால் அதற்கு காரணம் அஜித் ரசிகர்கள் தான். வாரிசு படம் சீரியல் மாதிரி இருக்கிறது என்று சொல்லி சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளை வாரிசை பார்க்க தியேட்டருக்கு செல்ல வைத்துவிட்டார்கள். அதனால் அஜித் ரசிகர்களுக்கு தான் விஜய் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

வம்சிவாரிசு படத்தை சீரியல் போன்று இருப்பதாக பலரும் கிண்டல் செய்ததை பார்த்த வம்சி பைடிபல்லி கோபம் அடைந்து பதில் அளித்தார். படம் எடுத்து ரிலீஸ் செய்வது கடினம் என்றார். மேலும் டிவி சீரியல்கள் எதற்கும் குறைந்தது இல்லை. அவையும் கிரியேட்டிவ் வேலை தான் என வம்சி மேலும் தெரிவித்தார். தான் சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு வந்து சினிமா எடுப்பதாகவும் கூறினார்.

விளாசல்வம்சி கூறியதை பார்த்தவர்களோ, நீங்கள் ஒன்றும் சமூகத்திற்கு சேவை செய்யவில்லை. நீங்களும் சரி, விஜய்யும் சரி பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறீர்கள். பெரிய தியாகம் செய்தது போன்று பேச வேண்டாம் என சமூக வலைதளவாசிகளும், திரையுலகை சேர்ந்த சிலரும் கூட வம்சி பைடிபல்லியை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.