Rajini: ரஜினி பட வாய்ப்பை இழந்த சிபி சக்கரவர்த்தி..அவர்தான் காரணமா ? அடப்பாவமே..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. திரைத்துறையில் இவர் கண்டிராத வெற்றியே இல்லை எனலாம். ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வி அடைந்தது.

இதனால் சூப்பர்ஸ்டாரையே பலர் கடுமையாக விமர்சிக்க துவங்கினர். எனவே தன் அடுத்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.

Varisu: தோல்வியை நோக்கி நகரும் வாரிசு..தளபதிக்கே இந்த நிலையா ?

அந்த வகையில் தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து ரஜினி லைக்காவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதில் ஒரு படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கவுள்ளார். லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இதையடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ரஜினி சிபி சக்ரவர்த்தியை நிராகரித்ததாக தகவல் வந்துள்ளது. ஏனென்றால் ரஜினிக்கு சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை பிடித்துவிட்டபோதும் திரைக்கதையை எழுத பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலின் தந்தை விஜயேந்திர பிரசாத்தை அணுகியுள்ளார்.

அவர் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையை எழுதுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த திரைக்கதை ரஜினிக்கு நம்பிக்கை தரும் வகையில் இல்லை என்பதால் அப்படத்தை கைவிட்டுவிட்டு வேறொரு இயக்குனரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் ரஜினி.

இந்நிலையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அநியாயமாக பறிபோனதை எண்ணி சிபி சக்கரவர்த்தி வருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.