ஆப்கானிஸ்தானில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.. 158 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரத்தில் 158 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

குளிரை எதிர்கொள்ள போதிய அளவில் அடுப்பு, நிலக்கரி, ஆடை, போர்வைகள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பணியாளர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பதால், நாட்டில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் கால்நடைகளும் குளிரால் உயிரிழந்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.