ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை ராம்பானில் இருந்து காஷ்மீர் நோக்கி மீண்டும் நடைபயணம் தொடங்கினார். ஆனால், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக இன்றைய நடைபயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
மேலும் நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு மீண்டும் நடைபயணம் தொடங்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தற்போது நடைபயண குழு ராம்பனில் உள்ள நிலையில், வரும் 30ம் தேதி ஸ்ரீநகர் சென்றடைகிறது.