நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, கடந்த சில நாட்களாக 545 காசுகளாக இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று என்இசிசி மண்டல தலைவர் செல்வராஜ் முட்டை விலையில், 30 காசுகள் ஒரே நாளில் குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 545 காசில் இருந்து, 515 காசுகளாக குறைந்துள்ளது. ஜதராபாத் மண்டலத்தில் முட்டை விலை குறைவாக இருப்பதால், அந்த விலையையொட்டி, நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
