தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்த கோவில் யானை!!

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஏற்றப்பட்ட கொடிக்கு யானை காந்திமதி மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

74ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோயில்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

அதில், நெல்லையப்பர் கோயிலில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வாசல் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்குக் கோவில் யானை காந்திமதி, பிளிறல் சத்தத்துடன் மரியாதை செய்தது.

கோவில் செயல் அலுவலர் சிவமணி, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மரியாதை செய்தனர். அதன்பின்னர் கோவில் அர்ச்சகர்கள் தேசிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர்.

பின்னர் அங்கிருந்தவர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. கோயில் கானை காந்திமதி தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.