பிரதமர் குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடை; அமெரிக்கா பரபரப்பு கருத்து.!

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது.

ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல” என விமர்சித்தார். அதைத் தொடர்ந்து யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறும்போது, ‘‘இந்திய அரசிடம் ‘பிளாக் இன் இந்தியா’ என்ற திட்டம் உள்ளது. பிபிசியின் தலைமையகம் இந்தியாவில் எங்காவது இருந்திருந்தால், மோடி அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கும்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மோடி ஜியிடம் ‘ராஜ் தர்மத்தை’ பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பிபிசி தொடர் தடுப்பதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. இது போன்ற செயல்கள் ஆவணப்படத்தில் உள்ள உள்ளடக்கம் உண்மை என்று பொதுமக்களை நம்ப வைக்கிறது. நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதை உங்கள் செயல்கள் எங்களிடம் கூறுகின்றன’’ என தெரிவித்தார்.

ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடை செய்தாலும், தெலங்கானா, கேராளா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களில் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதேபோல் டெல்லியின் புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், நேற்று மாலை பிபிசி ஆவணப்படத்தை திரையிட இருந்த நிலையில் அங்கு போராட்டம் வெடித்தது. கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கேரளாவில் மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள சண்முகம் கடற்கரையில், மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிபிசி ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டது. அதேபோல் பிபிசி ஆவணப்படத்தில் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது குறிப்பிடதக்கது.

விருதுநகர் -குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தநிலையில் பிபிசி ஆவணப்படம் தடைசெய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ‘‘உலகம் முழுவதும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கருத்துச் சுதந்திரம், மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் போன்ற ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மனித உரிமைகளாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. சோதனை!

உலகெங்கிலும் உள்ள எங்கள் உறவுகளில் இது ஒரு புள்ளியாகும். நிச்சயமாக இந்தியாவிலும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு கவலைகள் இருக்கும்போது, அதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமையாகும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.