சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் 2 நாள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்படி, பிப்ரவரி 1, 2ந்தேதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 4 மாவட்டங்களில், அரசின் திட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு, […]
