இந்தியாவில் தன்னை பிணைக்கைதியாக பிடித்துவைத்துள்ளதாக பிரெஞ்சு நடிகை பரபரப்பு புகார்


பிரெஞ்சு நடிகை ஒருவர், தான் இந்தியாவிலுள்ள தனது வீட்டிலேயே பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் வீடு வாங்கிய பிரெஞ்சு நடிகை

இந்தியாவிலுள்ள கோவாவில் வீடு ஒன்றை வாங்கியுள்ள Marianne Borgo (75) என்னும் பிரெஞ்சு நடிகை, தான் தனது வீட்டிலேயே பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தான் அபாயமான சூழலில் திகிலுடன் இருப்பதாகவும் நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Francisco Sousa என்னும் சட்டத்தரணியிடமிருந்து 2008ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாங்கினார் Marianne. Francisco மரணமடைந்துவிட்ட நிலையில், அந்த வீட்டுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் தன்னை பிணைக்கைதியாக பிடித்துவைத்துள்ளதாக பிரெஞ்சு நடிகை பரபரப்பு புகார் | French Actress Held Hostage

நீதிமன்றம் சென்றுள்ள பிரச்சினை

தற்போது அந்த வீட்டை உரிமை கோரும் நபர்கள், தன் வீட்டுக்கான மின் இணைப்பையும் தண்ணீர் இணைப்பையும் துண்டித்துவிட்டதால், தான் தண்ணீரும் இல்லாமல் இருட்டில் இருப்பதாக தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் Marianne.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதில் தாங்கள் தலையிடமுடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.