நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆவது ஆண்டு விழாவை அம்ரித் மகோத்சவ் என்று மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அம்ரித் மகோத்சவின் ஒரு அங்கமாக முகல் கார்டனின் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அம்ரித் உதயன் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரௌபதி மர்மு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.