பிபிசி ஊடகம் குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இந்த ஆவணப்படம், “இந்தியா: தி மோடி கொஸ்டின்” என்ற பெயரில் பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த ஆவணப்படம் ஒரு சாராரின் கருத்தைப் பரப்புரை செய்யும் வகையில் இருப்பதாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டிருப்பதாகவும் எதிர்ப்புகள் வலுத்தன.இதையடுத்து, மத்திய அரசு இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இந்தியாவில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தின் யூ-ட்யூப்பிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கைக்கு நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் பல இடங்களில் அதனை திரையிட்ட மாணவர்கள் மீதான கைது நடவடிக்கை நடந்தது. இதனை கண்டித்து சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள டி.பி சத்திரம், கீழ்பாக்கம் கார்டன் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு பிபிசியின் ஆவணப்படத்தை அவரவர் கைபேசியில் அதே இடத்தில் அமர்ந்து பாத்தனர். தகவல் அறிந்த போலீசார், 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தது.