கேரளா: நகை கடையில் புகுந்து நெக்லஸ்-ஐ தூக்கி செல்லும் எலி – வைரலாகும் சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள நகை கடையில் புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைகடை ஒன்றில் விற்பனைக்காக காட்சி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நெக்லெஸ் ஒன்று காணாமல் போயிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
image
அப்போது நள்ளிரவில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லெஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் நகையை திருடும் திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லெஸ்-ஐ தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.