Rajini: என் புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது..மீறினால் நடவடிக்கை..ரஜினி அதிரடி..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.

இதன் காரணமாக ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்களும் வந்தன. இனி ரஜினியின் படம் ஓடாது, இனி அவர் நடிக்காமல் இருப்பதே நல்லது என சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.

Rajini: வாழ்க்கை ஒரு வட்டம்..தலைவர் சொன்ன அட்வைஸ்..இணையத்தில் வைரல்..!

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், ஷிவ்ராஜ் குமார், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து ரஜினி லைக்காவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினி தரப்பிலிருந்து வெளியான ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், ரஜினியின் பெயரையும், புகைப்படத்தையும், குரலையும் அனுமதியின்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்த கூடாது என ரஜினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே அதை தடுக்கவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.