”போலீசாரை அவதூறாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட்..” – திருமாவளவன்..!

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வி.சி.க மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.

திருமாவளவன் அறிவித்துள்ளார். காவலரை சாதியை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக கைதான பாஸ்கரன், கடந்த 26ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தபோது, போலீசாரை அவதூறாக பேசியபடி, பேரணியாக சென்ற வீடியோ வெளியானது.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், பாஸ்கரன் 3 மாதத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.