பாகிஸ்தான்: மசூதியில் குண்டு வெடிப்பு; 20-க்கும் மேற்பட்டோர் பலி… பலர் படுகாயம் – தொடரும் பதற்றம்!

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின், பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று வழக்கம் போல தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு மதியம் 1.40 மணியளவில் திடீரென வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மசூதி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

குண்டு வெடிப்பு

இந்த வெடிகுண்டு விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞப்படுகிறது. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.