‘வீர சிம்ஹா ரெட்டி பார்த்து தலைவர் ரஜினி சொன்ன அந்த வார்த்தைகள்’ – கோபிசந்த் நெகிழ்ச்சி!

பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை ரூ. 129.58 கோடி வசூல் செய்துள்ளது.

image

இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கோபிசந்த் மாலினேனியை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையிலேயே இது ஒரு அதிசயமான தருணம். தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தைப் பார்த்து மிகவும் பிடித்ததாகக் கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து படத்தைப் பற்றி பாராட்டிய வார்த்தைகள், இதைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. நன்றி ரஜினி சார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.