13 ஆண்டு படுகுழி…சோபாவை கிழித்து பார்த்த தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்!


டிக்-டாக்கர் தாயான கேசி தன்னுடைய ரிமோட் கண்ட்ரோலை தேடி சோபாவை திறந்து பார்த்த போது அவர் கண்டதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


சோபாவை கிழித்து பார்த்த தாய்

குழந்தைகளின் தாயான கேசி என்ற பெண் சமீபத்தில் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் சோபா ஒன்றை கவிழ்த்தி அதை கிழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், கேசி தனது ரிமோட் கண்ட்ரோலை இழந்து விட்டதாகவும், எல்லா இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை என்பதால் இறுதியில் அது தன்னுடைய சோபாவின் பின்புறம் விழுந்து இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்ததாகவும் விளக்கியுள்ளார்.

13 ஆண்டு படுகுழி…சோபாவை கிழித்து பார்த்த தாய்க்கு காத்திருந்த ஆச்சரியம்! | Family Can T Believe When Mom Cut Open Their Sofa

ரிமோட்டை பெறுவதற்காக சோபாவின் பின்புறத்தை வெட்டிய Kacie, பிறகு உள்ளே பார்க்க துணியை மேலே தூக்கினாள்.

காத்திருந்த ஆச்சரியம்

அதிலிருந்து உடனே பொம்மைகள், உடைகள் மற்றும் குப்பை துண்டுகள் கொட்ட ஆரம்பித்தன, இதை பார்த்த கேசியின் குழந்தைகளில் ஒருவர் படுக்கையில் இருந்து விழுந்த பொம்மைகளை வெளியே எடுக்க தொடங்குகிறார்.

இதையடுத்து “நீங்கள் ரிமோட்டை வேட்டையாடச் சென்று உங்கள் சோபாவை அறுவை சிகிச்சை செய்து முடிக்கும் போது 13 வருடங்களாக குழந்தைகளை வளர்க்கும் வளர்க்கும் மிகவும் பயங்கரமான படுகுழியை கண்டறிவீர்கள் ” என்று வேடிக்கையாக கேசி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பார்வையாளர் ஒருவர், உண்மையான ரகசியம் என்னவென்றால், குழந்தைகளுடன் 13 ஆண்டுகளாக எப்படி ஒரே சோபாவை வைத்து வைத்திருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.