Vijay sethupathi: இரு பெண்களை அருகில் வைத்துக்கொண்டு கதை கேட்கும் விஜய் சேதுபதி..ஷாக்கான இயக்குனர்கள்..!

தமிழ் சினிமாவில் எந்த வித கதாபாத்திரங்களையும் தயங்காமல் ஏற்று நடிக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. என்னதான் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான ரோல்களிலும் அசால்டாக நடித்து வருகின்றார் விஜய் சேதுபதி.

இவரின் சமீபத்திய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி. இதைத்தொடர்ந்து தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஷாருக்கான் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கின்றார்.

Thalapathy 67: விஜய் விஷயத்துல நான் பண்ண ஒரே தப்பு இதுதான்..ஓப்பனாக பேசிய SAC ..!

இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இது தவிர வெப் தொடர்களிலிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் பல புதுமுக இயக்குனர்கள் விஜய் சேதுபதியை நம்பியே கதைகளை உருவாக்கி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

வித்யாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியை நம்பி பல புதுமுக இயக்குனர்கள் இருக்கின்றனர். தற்போது அவர்கள் எல்லாம் விஜய் சேதுபதிக்கு கதை சொல்லவே தயங்குகின்றார்களாம். ஏனென்றால் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது அருகில் எப்போதும் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறாராம்.

கதை சொல்ல வரும் இயக்குனர்களை அந்த பெண்களை பார்த்தே கதை சொல்ல சொல்கிறாராம் விஜய் சேதுபதி. இதன் காரணமாக பல இயக்குனர்கள் அப்சட்டில் இருக்கின்றார்கள் என தகவல் வந்துள்ளது. மேலும் அந்த இரண்டு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் பெண்கள் என வெளியில் பேசி வருகிறார்களாம்.

அவர்கள் கதை நன்றாக இருக்கின்றது என கூறினால் விஜய் சேதுபதி அக்கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் வருகின்றன.இதனை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.