பைக்கை பிடுங்கி அட்டகாசமா? வடமாநிலத்தவர் மீது வதந்தி..! திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வடமாநில தொழிலாளர் மீது மோதிய விவகாரத்தில், உண்மை சம்பவத்தை மறைத்து, வாட்ஸ் அப்பில்  வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்பத்குமார் என்பவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தான் வேலை முடித்து விட்டு பொங்குபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, வடமாநிலத்தவர் மீது லேசாக மோதிவிட்டதாக கூறியுள்ளார்.

இதில் அவர் கீழே விழுந்ததில் அவரின் செல்போன் மட்டும் லேசாக சேதமடைந்ததாகவும், அதை சரி செய்வதற்கான 500 ரூபாய் பணத்தை தான் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகும் தகவல்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சம்பத் வீடியோவில் தெரித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.