திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா!

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் இயக்குனர் ஆனவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருந்தார். மேலும் இரண்டாவதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்து வரும் சவுந்தர்யா, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு அந்த கோவிலில் உள்ள சண்முகா விலாசத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திருச்செந்தூர் கடலில் கால் நனைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.