மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

உக்ருல்,

மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பிற்காக சிலர் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும், இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.