வேங்கைவயல் சம்பவம்; குற்றவாளிகள் யாருனே தெரியல – வருந்தும் திருமா

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கைவயல் பகுதி நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. இந்த விவகாரத்தை அடுத்து மாவட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் இதுவரை கைது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி
சீமான்
திமுக அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனால் திருமாவளவனுக்கும், சீமானுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. மேலும், அண்மையில் சீமானின் பேச்சுகளுக்கு பதில் அளித்த திருமாவளவன்; பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தை எதிர்த்து பேச வேண்டும் என்பதுதான் சீமானின் அரசியல். வேங்கைவயல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட, தன்னுடைய இந்த அரசியல் அதிகம் பேசப்பட வேண்டும் என்பதிலேயே அவர் கவனம் செலுத்துகிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், ”வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் இதுவரை கண்டிபிடிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று
திருமாவளவன்
இச்சம்பவத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார். வேங்கைவயல் கிராமத்தில் விசிக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு திருமாவளவன் தலைமையேற்று நடத்தினர்.

அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே போலீசார் பழி சுமத்துவதாக புகார் எழுந்தது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், இதுவரை சம்பவத்தப்பட்டவர்களை கண்டறியவில்லை.

திமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அதிமுகவும், பாஜகவும், வேங்கைவயல் சம்பவம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்கள்? பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி, மத முரண்களை வைத்து அரசியல் செய்யத் தொடங்கியிருக்கின்றன. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் இந்தக் கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என இவ்வாறு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.