"முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அவசியம்" – திருமாவளவன்

பொதுமக்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டியது அவசியம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் திருச்சி புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ;
ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது. நானும் பரப்புரையில் அடுத்த வாரம் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். பேனா நினைவு சின்னம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பேசிய அவர்,
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது. அதேவேளையில் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கும் கூடிய வகையில் நினைவு சின்னம் இருக்க வேண்டும். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பார் என தெரிவித்தார். விசிக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் நாடாளுமன்ற கூட்ட தொடர் முடிவுக்கு பிறகு மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்களுக்கான புதிய பட்டியல் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியில் களப்பணி செய்பவர்களுக்கே நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு ஆடியோவில் பேசி இருப்பார். இடைத் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.