மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்.. விசாரணையில் தங்கக்கட்டிகள் என தகவல்..!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, ராமநாதபுரம் மண்டபம் பகுதி கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் தங்கக்கட்டிகளை, அதிநவீன கருவிகளை கொண்டு, இந்திய கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினர், மண்டபம் தெற்கு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

இன்று அதிகாலை மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தை நோக்கி வந்த மீன்பிடி பைபர் படகை, அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது, படகில் இருந்தவர்கள் மர்மப்பொருள் ஒன்றை கடலில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. கடலோர காவல்படையினர் படகில் இருந்த மூவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக்கட்டிகளை கடலில் வீசியதாக அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் ஸ்கூபா டைவிங்க் மற்றும் கடல் சாகச விளையட்டு வீரர்களை கொண்டு அந்த மர்மப்பொருளை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.