ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள அனுமதி


ஓமானில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்

ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள அனுமதி | Sri Lankan Women Working In Oman

பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.