பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப் பிரித்து, அரிவாளுடன் உள்ளே இறங்கி திருட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப் பிரித்து, அரிவாளுடன் உள்ளே இறங்கி திருட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாதப்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜினியின் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தனியாக வசித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன் சரோஜினி கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதனை அறிந்த திருடன் இன்று பிற்பகல்  சரோஜினி வீட்டிற்குள் இறங்கியுள்ளான். அப்போது பக்கத்து வீட்டுடில் வசிக்கும் சரோஜினியின் உறவினர் பெண் வீட்டினுல் இருந்து சத்தம் கேட்டதால், சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு ஒருவன் அரிவாளுடன் இருந்ததை பார்த்து அப்பெண் கூச்சலிட்ட நிலையில் ஊர் மக்கள் அவனை பிடித்துள்ளனர்.

பல்லடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவன் மேட்டூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும்,  பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் 3 வீடுகளில் ஐந்தாயிரம் ரூபாய் திருடியதாகவும் ஈஷ்வரன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.