ராமேஷ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கத்தில், 20 கிலோ தங்கம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து நடுக்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என கடலோர காவல்படையினர் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த புதன்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம், […]
